தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
▼
Friday, October 25, 2013
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
Thursday, October 24, 2013
கணினி ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.
Tuesday, October 22, 2013
ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர்.
இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது. அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது. வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது.
தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர்.
இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது. அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது. வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது.
தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Saturday, October 19, 2013
Thursday, October 17, 2013
காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு
பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமர், சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, ஆண்டு மார்ச், 5ம் தேதி தமிழகம் முழுவதும், 16, 549 பேரை பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்தது. மாதந்தோறும், 5,000 ரூபாய் சம்பளம் என்றும், வாரத்தில் மூன்று அரை நாள் பணி செய்ய வேண்டும் என்றும், அரசாணை வெளியிட்டது.
காலப்போக்கில், பள்ளி தலைமையாசிரியர்கள், எங்களை முழுநேர ஆசிரியராகவே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கம்ப்யூட்டர் ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியாற்றுமாறு, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால், 5,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, எங்களை முழுநேர ஆசிரியர்களாக, அரசு நியமிக்க வேண்டும்.
சேலம், நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதிநேர ஆசிரியர் சக்திவேல் பணிபுரிந்து கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது குடும்பத்துக்கு, தமிழக அரசு, முதல்வர் நிவாரண நிதி வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய பட்டியல் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நேரத்தில் ஆவணத்தை கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், இந்த மாத இறுதியில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Friday, September 20, 2013
தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே!' : ஜனவரிக்குள் தேர்வு நடவடிக்கையை முடிக்க உத்தரவுசென்னை:
தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே!' : ஜனவரிக்குள் தேர்வு நடவடிக்கையை முடிக்க உத்தரவுசென்னை:
Friday, September 13, 2013
நமது புதிய இணையதளம் http://tamilnaduteachersinschool.blogspot.in/
இன்று முதல் அனைத்து ஆசிரியர்களுக்கான தகவல்கள் இத்தளத்தில் வெளியிடப்படும்
Friday, September 6, 2013
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான வைகை செல்வன் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.அவர் பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்பண்பாடு ஆகிய இலாகாக்களின் பொறுப்பில் இருந்து வந்தார்.வைகை செல்வன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அவரது பொறுப்பை, உயர்கல்வித்துறை அமைச்சரான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்று, கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– முதல்–அமைச்சரின் பரிந்துரையின் பேரில், பள்ளிக்கூட கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்பண்பாடு அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்.மேலும், முதல்–அமைச்சர் பரிந்துரையின் பேரில், தொழில் நுட்ப கல்வி உள்பட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் அமைச்சராக இருக்கும் பி.பழனியப்பன் இதுவரை வைகைச்செல்வன் வகித்து வந்த பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது
ECS முறையில் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ECS முறையில் நேரடியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Thursday, September 5, 2013
Thursday, August 22, 2013
அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு.
2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கான பெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினி அறிவியல் B.Ed., சங்கத் தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tuesday, August 6, 2013
பகுதிநேர கணினிப் பயிற்றுநர்கள் - அரசுக்கு கோரிக்கை
பகுதிநேர கணினிப் பயிற்றுநர்கள் தங்களை நிரந்தர பயிற்றுநராக்கவும், மேல் நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநராக்கவும் வேண்டி மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :-
கணினிப் பயிற்றுநர்கள் நியமன வரலாறு :
அரசு மேல் நிலைப் பள்ளிகளில், கடந்த 1999 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1850 கணினி பயிற்றுநர்கள், தனியார் நிறுவனத்தின் மூலமாக தற்காலிக பயிற்றுநர்களாக ரூ. 2500/- தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நிறுவன ஒப்பந்தம் 2004 ஆம் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், இப்பயிற்றுநர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 2006 ஆம் ஆண்டு அரசாணையை வெளியிட்டு, 2008 ஆம் ஆண்டு ஒரு தகுதித் தேர்வை நடத்தியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 1058 கணினிப் பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
தேர்வில் தவறியவர்களுக்கு, இரண்டாம் தேர்வு 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அத்தேர்வில் தேறிய 140 கணினிப் பயிற்றுநர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
எஞ்சிய கணினிப் பயிற்றுநர்களும் தொடர்ந்து பணியாற்றிய நிலையில், தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் மறுபயிற்றுநர்கள் நியமிக்கும் வரையில் பணியாற்றாமல் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காலிப்பணியிட விவரம் :
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட 652 பணியிடங்களுடன், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பணியிடங்களும் சேர்ந்து சுமார் 2000 கணினிப் பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
பகுதிநேர கணினிப் பயிற்றுநர்களின் கோரிக்கை :
தமிழக அரசு, மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வு நடத்தி, கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசாணை எண். 177 நாள். 11.11.2011 ன் படி, தமிழகம் முழுவதும், இடைநிலை வகுப்புகளுக்கு, சுமார் 5400 பகுதிநேர கணினிப் பயிற்றுநர்களை நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுச் செய்தது.
இப்பயிற்றுநர்களாகிய நாங்கள் பல ஆண்டுகள் கணினி ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு முன்பே பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு, எங்களை முழுநேர கணினிப் பயிற்றுநர்களாக மாற்றி முழு ஊதியம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மேல் நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறோம்.
Wednesday, July 31, 2013
2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?
பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித்துறை, பணி நீக்கம் செய்தது.
மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டது.
இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை" என, தெரிவித்தன.
Monday, July 29, 2013
மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்
"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.
சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், பலத்த காற்றில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை.
கண் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: "ஒளியை உணரும் மென்மையான உறுப்பு கண்கள்; பார்க்கும் திறனை அளிக்கிறது. கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்கள் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் "சி" அவசியம். பால், மீன், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, சாத்துக்குடி, திராட்சை, இளநீர், நெல்லிக்காய், மாம்பழம் ஆகிய வைட்டமின் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அனைத்து வகை கீரைகளும் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. அவற்றை தவிர்க்கக்கூடாது.
கண்ணில் தூசி விழுந்தால், கசக்கக் கூடாது; லேசாக கண்களை திறந்து மூடினால், கண்ணில் உள்ள நீரில் முழ்கி அதுவே வந்துவிடும். உறுத்தல் அதிகமாக இருந்தால், சுத்தமான நீரில் கண்களை கழுவலாம். பலத்த காற்று வீசுவதால், டூவீலர்களில் செல்பவர்கள், கண்ணாடி அணிவது அவசியம். சிறிய மண்துகள், தூசிகளால் கண் வலி ஏற்படும்.
கண் எரிச்சல், கண் சிவந்திருந்தால் மருந்து வாங்கி இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் ஒரு சொட்டு விடலாம். தொடர்ந்து எரிச்சல் இருந்தால் டாக்டர் ஆலோசனை பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்தால், பார்வை மற்றும் அதன் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்," என்றார்.
நன்றி : தினமலர்
கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர்!
ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக் சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில்.
தமிழக அரசால் 1975-ம் ஆண்டு மலையம்பாளையம் ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. 17 மாணவர்களைக்கொண்டு துவங்கிய இந்தப் பள்ளிக்கு, 2000-ல் ஆசிரியராக வந்தார் செந்தில். அப்போது 43 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர்.
கல்வி போதிப்பதில் ஆர்வமும் சமூக அக்கறையும்கொண்ட ஆசிரியர் செந்தில், பக்கத்து ஊர்களில் இருக்கும் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லிக் கேட்டபோது, ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆதிதிராவிடர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மற்றவர்கள் மறுத்துவிட, தன்னிடம் படிக்கும் 43 மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக உருவாக்கினார். மாலை நேரத்தில், அந்த மாணவர்களைப் பக்கத்து ஊர்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களின் அறிவாற்றலை வெளிக்காட்டச் செய்தார். இதைக் கவனித்தவர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அந்தப் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர்.
இப்போது, அரசு அதிகாரிகள், வசதி படைத்தோர் எனப் பல தரப்பினரும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முந்துகின்றனர். ஆனாலும் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 185 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 80 குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாற்றல் வாங்கி இங்கே சேர்ந்திருக்கிறார்கள். ஓராசிரியர் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளியில், இன்று ஐந்து ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக இரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். மேலும் வேன் வசதியும் வந்துள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது?
''முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறோம். அவர்களை மிரட்டுவதோ, அடிப்பதோ கிடையாது. நான்காம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறைப்படி எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகளை ஒரு புத்தகமாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். படங்களைப் பார்த்து அவர்களாகவே புரிந்துகொள்ளத் தேடல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். ஆங்கில இலக்கணத்தை புரியும்படிச் சொல்லிக்கொடுக்கிறோம். பெற்றோர்களிடம் தினமும் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். நம்மால் முடிந்ததைச் சரியாகச் செய்தால்தான் பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்ததால், ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களாக எங்கள் பள்ளி மாணவர்களே திகழ்கின்றனர்'' என்றார் செந்தில்.
அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பலர் தயங்கும் இந்தச் சூழலில், மலையம்பாளையம் அரசுப் பள்ளியில் சேர முண்டியடிக்க வைத்த ஆசிரியர் செந்தில், நிச்சயம் ஒரு கனவு ஆசிரியரே!
பகுதி நேர கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ததற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இருண்ட எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, அனைத்து பகுதி நேர பயிற்றுநர்கள் சார்பாக பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் பணிகளை செவ்வனே செய்கிறோம் என்பதில் தங்களுக்கு ஐயமில்லை. 16549 பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பங்கள், மற்றும் உறவினர்களும் என்றென்றும் தங்களுக்கு கடமை பட்டு உள்ளோம்.
தாய் என்பவள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு மட்டுமே. அம்மா என்பவள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் துன்பங்களை மட்டும் போக்குவாள்.
ஆனால் தங்களோ தமிழ்நாட்டையே பெற்றெடுத்து அனைத்து மக்களையும் தம் பிள்ளைகளாய் எண்ணி பிள்ளைகளின் துன்பங்களை போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி என்னும் விளக்கு ஏற்றி வைத்த அம்மா. தம் பிள்ளைகளை எப்பொழுதும் கை விட மாட்டீர் என் நம்புகிறோம்.
“தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்”
“வாழ்க பல்லாண்டு தாயே வாழ்க”
“இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த தெய்வமே”
“வாழ்க பல்லாண்டு தாயே”.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிநீக்கம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் பி.எட். படிக்காதவர்கள்.
இந்த நியமனத்தை எதிர்த்து பி.எட். படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பி.எட். படிக்காமல் பணிபுரியும் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பணி நீக்கம்
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.